Saturday, December 21, 2024

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன
தீண்டல் இல்லாமலே
முடிவு வரை!

நெருக்கத்தை நீட்டுகிறது
பயணியர் வசதிக்காக
அகலப் பாதை திட்டம்!

பலகைகள் இணைக்கிறது
ஆனாலும்
பயன் என்ன?

நகர்ந்து நெளிந்திடக் கூடாதாம்
வலுவான தண்டவாளத்தில்
சிறுகற்கள்!

பிறர் வாழப் பிரிகிறோம்
நன்றி மறவாமல் இருப்பதே
நன்று!

நுதல்விழி
இராணிப்பேட்டை

இழப்பதற்கு என்ன இருக்கிறது?அனைத்தையும் இழந்த பிறகு!

இழப்பதற்கு என்ன இருக்கிறது?
அனைத்தையும் இழந்த பிறகு!

தொலைப்பதற்கு என்ன இருக்கிறது?
வாழ்க்கையே தொலைந்த பிறகு!

வெளிச்சத்திற்கு என்ன இருக்கிறது?
இருளின் ஆட்சிக்குப் பிறகு!

கொடுப்பதற்கு என்ன இருக்கிறது?
கொட்டிக் கவிழ்த்த பிறகு!

தடுப்பதற்கு என்ன இருக்கிறது?
தடுக்கி விழுந்த பிறகு!

பிடிமானம் என்ன இருக்கிறது?
தூணே சரிந்த பிறகு!

சாதிக்க என்ன இருக்கிறது?
சரிந்து கிழிந்த பிறகு!

சோதிக்க என்ன இருக்கிறது?
சேற்றுக்குள் சிக்கிய பிறகு!

நுதல்விழி
இராணிப்பேட்டை மாவட்டம்

தேவை வரையில் அருகில் அமர்த்திதேவை தீர்ந்தபின் முதுகில் குத்திகால காலமாய் காயப்படுத்தும் கலைக்குஆலகால நஞ்சுக்கு பெயர் துரோகம்!

தேவை வரையில் அருகில் அமர்த்தி
தேவை தீர்ந்தபின் முதுகில் குத்தி
கால காலமாய் காயப்படுத்தும் கலைக்கு
ஆலகால நஞ்சுக்கு பெயர் துரோகம்!

கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும்
மகன் தந்தைக்கும் தந்தை மகனுக்கும்
மகள் தாய்க்கும் தாய் மகளுக்கும்
மாமன் மைத்துனனுக்கும் மைத்துனன் மாமனுக்கும்

அண்ணன் தம்பிக்கும் தம்பி அண்ணனுக்கும்
அக்கா தங்கைக்கும் தங்கை அக்காவுக்கும்
அரசு மக்களுக்கும் மக்கள் அரசுக்கும்
உறவுகள் உறவுகளுக்குள்
மக்கள் மக்களுக்குள்...

மாறாத நட்பு சாய்க்காது என்றால்
அதற்கும் விதிவிலக்கு இல்லாமல் போனது
காலம் பார்த்து காத்திருந்து காத்திருந்து
ஞாலம் ஆளும் ஆசையில் 
வீழ்ந்து....

எதிரில் நிற்கும் பகையை முறிக்கலாம்
ஒளிந்து தாக்கும் பகையை அழிக்கலாம்
பதுங்கிப் பாயும் பகையை விரட்டலாம்
பார்க்காமலே கண்முன் நிற்கும் துரோகியை?

யாரை நம்புவது எங்கு நம்புவது
எப்படி நம்புவது எதற்கு நம்புவது
சாதாரண நம்பிக்கைக்கு இத்தனை வினாக்களா?
சாதாரணமாய் நின்ற துரோகங்களுக்கு முன்னால்!


நுதல்விழி
இராணிப்பேட்டை

காதல் பைத்தியம்

காதல் பைத்தியம்

முகம் அறியா அவன்
முழுமதி இரவில் 
முழுதாய் என்னைக் களவாடிய கள்வன்...

முன்னவனாய் நின்றது நிழல்
பின்னவனாய் நின்றது அவன்
என்னவனாய் இருக்க
மன்னவனாய் வருவானா?

கடிதாய் வந்தான்
எளிதாய் இருந்தான்
இயல்பாய் பேசினான்
முழுதாய் மறந்தேன் என்னை!

நிற்க முடியாமல்
திகைத்தே போனேன்
எப்படி நடந்தது
என்னுள் மாற்றம்!

உணவைத் தவிர்த்தேன்
உறக்கம் தொலைத்தேன்
கனவே இல்லை
கற்பனையில் வாழ்ந்தேன்!

வெட்கப்பட்டேன்
தலைகுனிந்தேன்
தனுக்குத் தானே பேசிக்கொண்டேன்
நினைவில் நின்றவன்
எங்கே காணோம்!

நகமும் தீர்ந்து
விரலைக் கடித்தேன்
நின்ற இடத்தில் விரலில் கோலம்
அழைக்கும் குரல்தான் கேட்டவில்லை
அடிப்பட்ட பின்னே அதிர்ந்து போனேன்!

அலமாரி ஆடைகள்
கட்டிலில் கிடக்க
அலங்கோலமானது அறையும் தானே!
எதைத்தான் அணிவது
கலைத்துப் போட்டேன்
எடுத்தது எல்லாம் நல்லாவே இல்லை!

வட்டப் பொட்டு வடிவழகா
நீட்டு பொட்டு நிஜவழகா
பிறை பொட்டு மறையழகா
பூப்போட்ட பொட்டு பொலிவழகா!

காதோடு கதை பேசும்
தோடழகா
என்னோடு தலையாட்டும்
தொங்கட்டானழகா!

கலகலக்கும் கண்ணாடி வளையலா
பளபளக்கும் கல் வளையலா
வண்ண வண்ண வளையலா
ஒற்றை வளையலே போதுமா?

துளைக்கும் கேள்வியில்
துடியாய்த் துடிக்கிறேன்
முளைத்த காதலில்
முள்ளாய் சுகங்கள்!

முட்டுச் சந்தில் முட்டிக்கொண்டேன்
தட்டுத் தடுமாறி நிலையை அறிந்தேன்
படிப்பில் கூட நட்டம் இல்லை
நடிப்பில் கட இப்படி நடக்குமா?

என்னன்னவோ உளருகிறன்
எண்ணத்தான் முடியவில்லை
என்னத்தை சொல்வது என்னை....

நுதல்விழி
இராணிப்பேட்டை

கோலமிடும் கோகிலமேகோவம்தனை விட்டுவிடு...

கோலமிடும் கோகிலமே
கோவம்தனை விட்டுவிடு...
குனிந்த பாசாங்கு போதும்
கொஞ்சம் நிமிர்ந்து நோக்கு...
முடிக்கப்பட்ட கோலத்திற்கு
முந்நூறு முத்தங்கள் விரல்களால்....
அலங்காரப் பேரழகே
அலங்கரித்த கோலம் போதும்....
முனகிக் கொண்டிருக்கும் என்னே....
முகம் பாராமலே, 
முகம் சுளிப்பதா?
தப்போ தவறோ செய்திடின்...
தண்டிக்கும் தேவதையே....
கொஞ்சம் மன்னிக்கவும் வேண்டுகிறேன்!
மௌனமாகக் கொன்றது போதும்...
மோகமாய் சற்றே நோக்கு!
வறண்ட என் முகத்தில்
வளமை வந்து சேரட்டும்!
கால் வலிக்க காத்திருப்பிற்கு
காதல் அம்பால் மருந்து விடு....
நெஞ்சுபடும் பாட்டிற்கு
கொஞ்சு மொழி பேசிவிடு....
கெஞ்சித்தான் நிற்கிறேன்
ஒற்றைக்கால் தவத்தில்..
மிஞ்சித்தான் போகிறாய்
ஊடலில் ஊமையாக...
நோகுதடி என் இதயம்...
போதுமடி உன் குறும்பு!

நுதல்விழி
இராணிப்பேட்டை

காய்ந்து உதிர மனமில்லைகசங்கி யாவது வாழ்கிறேன்...

காய்ந்து உதிர மனமில்லை
கசங்கி யாவது வாழ்கிறேன்...
வாசனை திரவியமாக!
மனதை மயக்கும்
மணம் கொண்டு வாழ...
துர்நாற்றத்தை விலக்கி
நல்நாற்றம் வழங்க...
குப்பிக்குள் அடைபட்டாலும்
குளுகுளுக்க வைக்கிறேன்...
தூரத்தில் இருந்தாலும்
எனது அடையாளத்தைப் பதிக்கிறேன்....
உதிர்ந்து உயிர்விடுவதைக் காட்டிலும்
பறிக்கப்பட்டு பாக்கியவான் ஆகிறேன்!

இப்படிக்கு
மடிவதற்குள் மன(ண)ம்விட்டு
கமகம நாற்ற மலர்!

வானவில் இறங்கி வந்து வாசலில் காத்திருக்க...

வானவில் இறங்கி வந்து 
வாசலில் காத்திருக்க...
வண்ணத்தாரகை 
பிஞ்சி விரல் 
பற்றிடவே தவமிருக்க
வண்ணப் பட்டாம்பூச்சி 
மனசுக்குள் படபடக்க
அஃறிணையும் 
காதலில் விழுந்து விட்டதே!
ஊயிரற்ற பொருளும்
உயிர்த்தெழுகின்றதே
உந்தன் விழிக்குள் சிக்கிட...
நான் மட்டும் என்ன
விதிவிலக்கா?
உன்னை விலகிச்செல்ல!

நுதல்விழி
இராணிப்பேட்டை

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...