வாடா மல்லியின்
வண்ணம் திருடி
மெல்ல இதழ் விரிக்கும்
மெல்லிய மலரே...
கன்னம் சிவக்கும்
வெட்கத்தை மறைக்க...
சின்ன முறுவலில்
சிதைத்திடலாமா?
நாணலாய் நீண்ட
மெல்லியத் தண்டில்....
நாணம் மறைக்கும்
புதிய முயற்சியோ?
பசுமை மாறும்
இலையும் கூட...
இதழாய் விரித்து
சிரிப்பது ஏனோ?
நுதல்விழி
இராணிப்பேட்டை
No comments:
Post a Comment