முரண்பட்ட இனங்களின்
முரண்படா அன்பில்
மெருகேறி அரங்கேறும்
புதிய அத்தியாயம்!
கடன்படா அன்பில்
உடன்பட்டு வாழும்
உயிர்களின் கூட்டம்
நடைபோட வேண்டுமே!
பார்த்துப் பழகியது பாதி
பார்க்காமல் துடித்தது மீதி
யாரோடு யார்?
எவரோடு எவரோ?
இனம் புரியா புரிதல்
சினம் அது நீங்கி
தினம் தினம் கொள்ளும்
அன்பு அதை பாராட்டு!
நுதல்விழி
இராணிப்பேட்டை மாவட்டம்
No comments:
Post a Comment