இறைவனின் எச்சரிக்கை
அகழ்வாரைத் தாங்கித் தாங்கி
புகழ் மங்கி நிற்குது நிலம்!
பதிலடி தந்தது பூகம்பம்!
அழுக்கு மனம் கொண்ட
கருப்பு பணங்களால்
சாக்கடையானது நீர்!
எதிர்க்க வந்தது சுனாமி!
புகைப்பார் வீசிய தீயில்
கருகி வீணாணது காடு!
பரபரன்னு பரப்பியது வைரஸ்!
பொறுப்பற்ற ஆட்சியில்
குறுக்குவழி பணக்காரனால்
நாசமானது காற்று!
வேற்று கிரகத்தில்
வீடு அமைக்க
சிதைக்கப்பட்டது ஆகாயம்!
புற ஊதாக்கதிர் தாக்கம்!
நுதல்விழி
இராணிப்பேட்டை
No comments:
Post a Comment