தூது செல்ல...
மாது மனசு படும்பாடு
ஓது அவன் காதில்!
போதும் உந்தன் புலம்பல்
மோது நேரில் நின்று...
கோதும் விரலால் வருடி
காது மடலில் பேசு!
நெல் மணிகளைத் தருகிறேன்
சொல் மாலை அணிந்திடு...
பழுத்த பழம் தருகிறேன்
அழுத்தமாக சொல்லிடு....
சோற்றுப் பருக்கைத் தருகிறேன்
தோற்று மட்டும் வராதே....
பிடித்த உணவைத் தருகிறேன்
மடித்த கடிதம் கொடுத்திடு..
நுதல்விழி
ராணிப்பேட்டை
No comments:
Post a Comment