Thursday, December 12, 2024

இருளில் ஒளிஇயற்கை தந்த விழிகடலைக் கடந்துவிண்ணைத் தாண்டிவீற்றிருக்கும் குறள் நாதன்!

இருளில் ஒளி
இயற்கை தந்த விழி
கடலைக் கடந்து
விண்ணைத் தாண்டி
வீற்றிருக்கும் குறள் நாதன்!

கன்னிக் குமரி கண்ட
மன்னிய திகழொளி...
விட்டுச் சென்ற லெமுரியாவை
மீட்டுத் தந்த குறள் நாயகன்!

எட்டுத் திக்கும் மட்டுமல்வ
தசரதனைப் போல்
பத்துத் திக்கும்
பதியம் போட்ட
குறள் தலைவன்!

எஞ்சிய மிச்சங்களை
பஞ்சம் இல்லாமல் 
சொல் ஏட்டில் மட்டுமின்றி
கல்வெட்டில் பொறித்த
அற்புதக் கலைஞன்!

தன்னை தான் செதுக்காமல்
தன்னைச் சார்ந்தவரையும்
செதுக்கொள்ளச் செய்த
படைப்பின் ஆசான்!

நுதல்விழி
இரணிப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...