கசங்கிப் போட்ட காகிதங்களில்
காதலில் தோய்ந்த கவி வரிகள்
கலங்கிய இதயச் சிதறல்கள்
சொல்ல முடியாத உள்ளுணர்வுகள்
தவிர்க்க முடியாத மோக தாகங்கள்
கற்பனைக்கும் எட்டாத கருத்துகள்
அளவில்லா ஆனந்த நினைவுகள்
அடக்கமட்டாத துயரின் வடிவங்கள்
ஒவ்வொன்றும்
எறிந்தவர் மனநிலையின்
ஆராய்ச்சிக் கூடம்
பிரிக்கப்படும் காகிதங்களில்...
நுதல்விழி
இராணிப்பேட்டை
No comments:
Post a Comment