பசலை படர்ந்ததோ
மாமை மறைந்து
மஞ்சள் படர்ந்து
வருத்தத்தில் கிளையா? விரலா?
மாறுபாடு அறியாமல்
மயங்கித்தான் அமர்ந்ததுவோ?
தன் சோகம் மறக்க
அவளின் இளர்தளிர் விரல்கள்கள்
வீணையென மீட்டிட
இராகம் ஒன்றை எழுப்பிட
ரீங்காரம் இசைத்ததோ?
மென்பஞ்சு விரல்கள்
காந்தள் மலரென
மையலில் வீழ்ந்து
மகரந்தச் சேர்க்கைக்கு
மன்றாடல் புரிந்ததுவோ?
வாசமில்லா மலரில்
வந்து அமர்ந்து சென்றதோ?
வசந்த மகள் கைவிரலின்
வாசம் அழைத்து வந்ததுவோ?
நுதல்விழி
இராணிப்பேட்டை
No comments:
Post a Comment