கருப்பு பேரழகி
கண்ணால் சொல்லும்
காதல் கதையைக் கூறு?
காந்தவிழி கொண்டு
என்னை ஈர்த்துச் செல்லும்
மாயக் கண்கள்
என்ன என்று கூறு?
கட்டழகியே கொட்டி வைத்த
முல்லைப் போல சிரிக்கும்
பற்கள் செய்த விந்தை
என்ன என்று கூறு?
காதல் காதல் என்று
மௌனமாக உச்சரிக்கும்
வாய்மொழியன் மந்திரம்
என்ன என்று கூறு?
வட்டநிலா கருத்த முகம்
சொட்டுகின்ற ஒளியோ
ஓராயிரம் கற்பனை வடிக்கும்
காவியம்
என்ன என்று கூறு?
பண்ணு போல
கன்னம் ரெண்டும்
கதகளி போல்
ஆடும் ஆட்டம்
என்ன என்று கூறு?
நுதல்விழி
இராணிப்பேட்டை
No comments:
Post a Comment