Saturday, December 21, 2024

ஒற்றைத் தாமரை



ஒற்றைத் தாமரை

மழையில் கரைந்ததால்
செந்தாமரை வெண்தாமரை ஆனதா?
ஆதவனைக் காணாது
வெளுத்துத்தான் போனதோ?
நடுநடுங்கும் குளிரில்
உறைந்துதான் போனதோ?
மழைச்சாரல் மயக்கத்தில்
மெய்மறந்து நின்றதோ?
ஊசிபோல் குத்தும் மழையில்
உணர்ச்சி அற்றுப் போனதோ?
தனிமை தந்த பயத்தில்
தவித்து தான் நிற்குதோ?

நுதல்விழி
இராணிப்பேட்டை மாவட்டம்

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...